நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 3, 2019
உலக செய்திகள்
1. ஜப்பானின் இளவரசரான நருஹிடோ(Naruhito) புதிய பேரரசராக பதவியேற்கவுள்ளார். இவரது ஆட்சிக்காலம் "ரெய்வா" (புதிய சகாப்தம்) என்றழைக்கப்படவுள்ளது.
தேசிய செய்திகள்
2. இந்தியாவின் மக்களைவை தேர்தலில் போட்டியிடும் ஏழ்மையான வேட்பாளராக மங்கே ராம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
3. இரண்டாம் தலைமுறை தகவல் ரிலே செயற்கைக்கோளான "டியான்லியான்" என்ற செயற்கைக்கோளை சீனா லாங்க்மார்ச் 3பி(Long march 3B) ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
4. வெனிசுலா நாட்டில் ரேஷன் முறையில் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
5. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) முதலாவது இந்திய உறுப்பினராக பிரஃபுல் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
6. ஏப்ரல் 1 முதல் பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஒன்றிணைந்து செயல்பட உள்ளன. இதன் மூலம் இரண்டாவது பொதுத்துறைவங்கியாக பேங்க் ஆப் பரோடாஉள்ளது.முதலிடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளது.
7. ஏப்ரல் 1 முதல் பல்லவன் வங்கியும் பாண்டியன் வங்கியும் இணைந்து செயல்பட உள்ளன. இதன் தலைவராக டி.தன்ராஜ் (T. Dhanraj) நியமிக்கப்பட்டுள்ளார். இதன் தலைமையகம் சேலம்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
8. இஸ்ரோ நிறுவனம் எமிசட் உள்பட 29 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இதனுடன் சேர்ந்து 6மாத ஆயிட்காலம் கொண்ட மூன்று ஆய்வு சாதனங்களும்அனுப்பப்பட்டுள்ளது
வர்த்தக செய்திகள்
9. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தியதிலிருந்து ஜிஎஸ்டி(1.06 லட்சம் கோடி) அதிகம் வசூலான மாதமாக "மார்ச் 2019" உள்ளது
முக்கிய தினங்கள்
10. ஏப்ரல் 2 - உலக ஆன்டிஸம் விழிப்புணர்வு நாள்(World Autism Awareness Day). இதன் கருத்துரு:- உதவி தொழில்நுட்ப செயலில் பங்கேற்பு (Assistive Technologies, Active Participation)
No comments:
Post a Comment